இந்தியரின் டாக்குமெண்டரிக்கு ஆஸ்திரேலிய விருது
சிட்னி:
பிஜி தீவுகளுக்கு இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டது குறித்து இந்தியர்எடுத்த டாக்குமெண்டரிக்கு ஆஸ்திரேலியா எஸ்.பி.எஸ். ரேடியோவின் ஆசியா-பசிபிக் விருது கிடைத்துள்ளது.
ஸ்வீட் சாரோ என்ற பெயரில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த டாகுமெண்டரி, 1879ம்ஆண்டு முதல் 1916ம் ஆண்டு வரை சுமார் 60,000 இந்தியர்கள் பிரிட்டிஷாரால் ஏமாற்றப்பட்டு பிஜி தீவுகளுக்குக்கொண்டு செல்லப்பட்டதை விளக்குகிறது.
அங்கு கரும்புத் தோட்ட வேலைகளுக்கு என்று 5 ஆண்டு ஒப்பந்ததில் அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள்,சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். பெரும்பாலும் பிகார், உத்தரப் பிரதேசத்தில் இருந்துகொண்டு செல்லப்பட்ட இவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர்.
இந்த வரலாற்றுக் கொடுமையை ஆஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். ரேடியோவுக்காக குமுத் மெரானி என்ற இந்தியர்டாகுமெண்டரியாகத் தயாரித்துள்ளார். இதனை 2004ம் ஆண்டின் படைப்பாக அங்கீகரித்துள்ள அந்த ரேடியோ,இந்த டாக்குமெண்டரிக்கு ஆசிய-பசிபிக் பிராட்காஸ்டிங் யூனியன் விருதை வழங்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து பிஜிக்கு கொண்டு செல்லப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களில் 35 சதவீதத்தினர்பெண்கள். அவர்கள் பாலியல்ரீதியிலும் பிரிட்டிஷாரால் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர்.