பாகிஸ்தான் ஏவுகணைச் சோதனை
இஸ்லாமாபாத்:
1,500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் தனது ஹத்ப்-5 கெளரி ஏவுகணையை இன்று பாகிஸ்தான் ஏவிசோதனையிட்டது.
இந்தச் சோதனை வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களைத் தாங்கிச்செல்லும் சக்தி மிக்கது இந்த ஏவுகணை.
இரண்டு மாதங்களில் மிக முக்கியமான ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தும் என கடந்த ஜூலைமாதத்தில் அந் நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்த ஏவுகணைச் சோதனையை அந் நாட்டுப் பிரதமர் செளக்கத் அஜீஸ் நேரில் பார்வையிட்டார். இச்சோதனை குறித்து இந்தியாவுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்த ஏவுகணையை பாகிஸ்தானின் கஹூட்டா அணு ஆராய்ச்சி மையம் வடிவமைத்துத் தயாரித்ததாக அந் நாடுதெரிவித்துள்ளது. ஏவுகணைகள் தயாரிப்பில் பாகிஸ்தானுக்கு வட கொரியாவும் சீனாவும் தொழில்நுட்பரீதியில்உதவி வருவது குறிப்பிடத்தக்கது.