ஜெயலட்சுமியிடம் சிபிஐ விசாரணை!
மதுரை:
ஏட்டையாவில் ஆரம்பித்து எஸ்.பி. வரை 20க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முறைகேடானதொடர்பு வைத்திருந்த ஜெயலட்சுமியிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
சிபிஐ கூடுதல் எஸ்.பி. சிவாஜி தலைமையிலான குழு ஜெயலட்சுமியின் பெயரால் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்ஆரம்பித்த வங்கிக் கணக்குகள் குறித்து மதுரையில் விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து ஜெயலட்சுமியின்பெற்றோரிடம் இன்னொரு சிபிஐ குழு விசாரித்தது.
ஈரோடு, பொள்ளாச்சியில் போலீஸ் அதிகாரிகளால் ஜெயலட்சுமிக்கு வாங்கித் தரப்பட்ட செல்போன்கள்,தொலைபேசி இணைப்புகள் குறித்தும் இன்னொரு குழு விசாரித்தது. இப்படி பல பக்கமும் பாய்ச்சல் காட்டி தமிழகபோலீசாரை திக்குமுக்காட வைத்த சிபிஐ இன்று ஜெயலட்சுமியிடமே விசாரணையில் இறங்கினர்.
இன்று காலை எல்லீஸ் நகரில் நகரில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்குவருமாறு அழைத்தனர். இதையடுத்து தனது வழக்கறிஞர் அழகர்சாமியை உடனே வீட்டுக்கு அழைத்தார்ஜெயலட்சுமி.
பின்னர் அழகர்சாமியுடன் காலை 8.30 மணிக்கு ஜெயலட்சுமி காரில் கிளம்பினார். எங்கோ போகிறீர்கள் என்றுநிருபர்கள் கேட்டபோது, அவரது வழக்கறிஞர் அழகர் சாமி, சிபிஐ விசாரணைக்கு செல்கிறோம் என்று பதில்தந்தார்.
ஜெயலட்சுமியின் பாதுகாப்புக்கு இருந்த போலீசாரையும் வீட்டிலேயே இருக்கச் சொல்விட்டு இருவரும்கிளம்பினர்.
ஜெயலட்சுமியை சிபிஐ அதிகாரிகள் சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.அவர்கள் இருக்கும் இடம் குறித்து அறிய உளவுப் பிரிவு போலீசாரும் ஜெயலட்சுமியின் பிற வழக்கறிஞர்களும்நெடு நேரம் அந்தப் பகுதியை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications