ஜெயலட்சுமி பெற்றோரை துருவும் சிபிஐ
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் ஜெயலட்சுமியின் பெற்றோரிடம் சிபிஐ விசாரணைநடத்தியுள்ளது.
இது குறித்து ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி, அண்ணன் சீனிவாசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
சிபிஐ அதிகாரிகள் காக்கிவாடன் பட்டிக்கு வந்தனர். எங்களிடம் என்ன படித்துள்ளோம், என்ன வேலைபார்த்தோம், எங்கெங்கு எத்தனை ஆண்டுகள் இருந்தோம், வருமானம் என்ன, ஜெயலட்சுமியின் கடந்த காலம்என்ன என பல விவரங்களைக் கேட்டனர்.
எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்று கூறினர்.
நீதிமன்றத்தில் கொடுத்த மனு, காவல் துறையிடம் கொடுத்த புகார்கள் ஆகியவற்றை நகல் எடுத்து வைக்கும்படியும்அதிகாரிகள் கூறினர்.
ஜெயலட்சுமிக்கும் எங்களுக்கும் எந்த வரவு, செலவு கணக்கோ, தொடர்போ எதுவுமில்லை. எங்களது வங்கிக்கணக்கு புத்தகத்தையும் சிபிஐயிடம் காட்டினோம்.
எங்கள் குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் 12 பேர் மீது புகார் கூறினோம். அதில் 7 பேர் மீது மட்டும்தான்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் வெள்ளையன் பணம், நகைகள் மற்றும் சான்றிதழ்களை மீட்டுத்தரவில்லை என்றனர்.
மேலும் இருவர் பெயர் அம்பலம்:
இந் நிலையில் ஜெயலட்மியுடன் தொடர்பு வைத்திருந்ததாக மேலும் இருவரது பெயர் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் வழக்கறிஞர் பயிற்சி மேற்கொண்டிருந்த சத்தியமூர்த்தி என்பவர் ஜெயலட்சுமியை திருமணம்செய்ததாகவும், ஜெயலட்சுமியின் விருப்பத்தின் பேரில் அவர் கோவைக்கு இடம் பெயர்ந்தாகவும் கூறப்படுகிறது.இதில் சத்தியமூர்த்தி ஜெயலட்சுமியை விட வயதில் குறைந்தவர் என்றும் தெரிகிறது.
ஜெயலட்சுமிக்கும் நிலக்கரி சுரங்க பொறியாளர்களுக்கும் ஆம்வே மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் தொடர்புஇருந்ததாக சிபிஐக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து 3 சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு நெய்வேலியில் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் இன்று ஜெயலட்சுமியை ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ விசாரிக்க ஆரம்பித்துள்ளதாகவும்கூறப்படுகிறது. இந்தத் தகவலை உறுதிப்படுத்த சிபிஐ வட்டாரங்கள் மறுக்கின்றன.
குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை:
இந் நிலையில், ஜெயலட்சுமிக்கும் எங்களுக்கும் எந்த பண பரிமாற்றமும் இருந்தது இல்லை என அவரது தந்தைஅழகிரிசாமி, தம்பி சீனிவாசன் ஆகியோர் கூறியுள்ளனர்.
சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் அழகிரிசாமி, சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
சிபிஐ அதிகாரிகள் காக்கிவாடன் பட்டிக்கு வந்தனர். எங்களிடம் என்ன படித்துள்ளோம், என்ன வேலைபார்த்தோம், எங்கெங்கு எத்தனை ஆண்டுகள் இருந்தோம், வருமானம் என்ன, ஜெயலட்சுமியின் கடந்த காலம்என்ன என பல விவரங்களைக் கேட்டனர்.
எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்று கூறினர்.
நீதிமன்றத்தில் கொடுத்த மனு, காவல் துறையிடம் கொடுத்த புகார்கள் ஆகியவற்றை நகல் எடுத்து வைக்கும்படியும்அதிகாரிகள் கூறினர்.
ஜெயலட்சுமிக்கும் எங்களுக்கும் எந்த வரவு, செலவு கணக்கோ, தொடர்போ எதுவுமில்லை. எங்களது வங்கிக்கணக்கு புத்தகத்தையும் சிபிஐயிடம் காட்டினோம்.
எங்கள் குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் 12 பேர் மீது புகார் கூறினோம். அதில் 7 பேர் மீது மட்டும்தான்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் வெள்ளையன் பணம், நகைகள் மற்றும் சான்றிதழ்களை மீட்டுத்தரவில்லை என்றனர்.
மேலும் இருவர் பெயர் அம்பலம்:
இந் நிலையில் ஜெயலட்மியுடன் தொடர்பு வைத்திருந்ததாக மேலும் இருவரது பெயர் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் வழக்கறிஞர் பயிற்சி மேற்கொண்டிருந்த சத்தியமூர்த்தி என்பவர் ஜெயலட்சுமியை திருமணம்செய்ததாகவும், ஜெயலட்சுமியின் விருப்பத்தின் பேரில் அவர் கோவைக்கு இடம் பெயர்ந்தாகவும் கூறப்படுகிறது.இதில் சத்தியமூர்த்தி ஜெயலட்சுமியை விட வயதில் குறைந்தவர் என்றும் தெரிகிறது.
இவரைத் தவிர இன்னொரு டிஎஸ்பியுடனும் ஜெயலட்சுமிக்குத் தொடர்பு இருந்ததாகவும் தெரிகிறது.