முத்திரைத் தாள்: ஐஜி வர்மாவிடம் சிபிஐ விசாரணை
சென்னை:
போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக சிபிசிஐடி பிரிவு ஐ.ஜி அமித் வர்மாவிடம் சிபிஐ அதிகாரிகள்விசாரணை நடத்தினர்.
போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக சிபிசிஐடியின் டி.ஐ.ஜியாக இருந்த முகமது அலி, உதவி கமிஷ்னராகஇருந்த சங்கர், மதுரையைச் சேர்ந்த எல்.ஐ.சி. அதிகாரி ராமசாமி சாது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ரமணியிடமும் சிபிஐ இரு வாரங்களுக்கு முன் விசாரணை நடத்தியது.
இந் நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடியின் ஐ.ஜி. அமித் வர்மாவையும் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரித்தனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட அமித் வர்மாவிடம் சிபிஐஅதிகாரிகள் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தேவைப்பட்டால் அவரை மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலி முத்திரைத் தாள் விவகாரத்தில் அப்துல் கரீம் தெல்கியின் கூட்டாளியான நிஜாமுதீனைத் தப்ப வைக்கமுகம்மது அலிக்கும், ரமணிக்கும் உடந்தையாக இருந்தார் அமித் வர்மா என்பது சிபிஐயின் முடிவு. இதற்காகமுகம்மது அலி மூலமாக போலி முத்திரைத் தாள் கும்பலிடம் இருந்து வர்மாவும் பணம் பெற்றார் சிபிஐ நினைக்கிறது.












Click it and Unblock the Notifications