விஜயகாந்த் மீது புகார்: விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
நடிகர் விஜயகாந்த் மற்றும் நெறஞ்ச மனசு படப்பிடிப்புக் குழுவினர் மீதான புகாரை விரிவாக விசாரித்து,தேவைப்பட்டால் வழக்குப் பதிவு செய்யுமாறு கோவை மாவட்டம் பொள்ளாச்சி துணைக் கண்காணிப்பாளருக்குசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சடையபாளயம் என்ற ஊரைச் சேர்ந்த பரணீதரன் என்பவர்சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், சடையபாளயத்தில் உள்ள தனது பண்ணைவீட்டுக்குள் விஜயகாந்த் மற்றும் நெறஞ்ச மனசு படப்பிடிப்புக் குழுவினர் அத்துமீறி நுழைந்தனர்.
அங்கு படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். பின்னர் அங்கிருந்து செல்லும்போது ரூ. 60,000 மதிப்புள்ள மோட்டார்உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர். மேலும் பண்ணையையும் பாழ்படுத்தி விட்டனர்.
இதுதொடர்பாக கோமங்கலம் போலீஸில் புகார் கொடுத்தபோது, போலீஸார் புகாரை வாங்க மறுத்து விட்டனர்.எனவே புகாரை பதிவு செய்து விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில்கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம் கோமங்கலம் இன்ஸ்பெக்டரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறுசமீபத்தில் உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந் நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இடைக்காலத்தீர்ப்பு வழங்கினார். அதன்படி, நடிகர் விஜயகாந்த் மற்றும் படக்குழுவினர் மீதான புகார்களை பொள்ளாச்சிடி.எஸ்.பி. விசாக்க வேண்டும். குற்றம் நடந்திருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தனது தீர்ப்பில்அவர் உத்தரவிட்டார்.