கலாம் பிறந்த நாள்: மன்மோகன் சிங் வாழ்த்து
பெங்களூர்:
இன்று 74வது பிறந்த நாள் காணும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துதெரிவித்தார்.
கர்நாடகாவில் சுற்றுப்பிரயாணம் மேற்கொண்டிருக்கும் கலாமை மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கலாம் சுற்றுப்பிரயாணத்தில் இருப்பதால் நேரில் சந்தித்து வாழ்த்துதெரிவிக்க இயலவில்லை என்றும், கலாம் நீண்ட காலம் நாட்டிற்கு சேவையாற்ற வேண்டுமென தானும் நாட்டுமக்களும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
கலாம் ஒரு நாள் முன்னதாகவே தனது பிறந்த நாளை நேற்று மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.பெங்களூர் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் மையத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில்கேக் வெட்டினார். பின்பு அந்தக் கேக் மாணவர்கள் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது.
அப்போது, பூமியுடன் சேர்ந்து சூரியனை இன்றுடன் நான் 73 முறை சுற்றி முடித்திருக்கிறேன். இன்று முதல் 74வதுசுற்றில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். அண்டத்தின் வரலாற்றோடு ஒப்பிடுகையில் மனிதனின் ஆயுட்காலம்என்பது ஒரு நேனோ செகண்ட் தான். எனவே எனது வயதும் ஒரு நேனோ செகண்ட்தான் என்றார் கலாம்.
பின்னர் மாணவர்களிடம் பேசிய கலாம், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 260 மில்லியன் மக்களின்வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொறுப்பும் மாணவர்களாகிய உங்களிடம் உள்ளது. இந்தியாவில் 540 மில்லியன்இளைஞர்கள் உள்ளனர். வேறெந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இளைஞர் சக்தி இல்லை.
எனது குறிக்கோள் இந்தியா-2020 என்ற என் கனவுத் திட்டத்தை அடைவது தான். இதை நாடாளுமன்றத்தில் ஏற்கச்செய்து, அதன் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அதை நிறைவேற்றச் செய்ய முயலப் போகிறேன்.
வருங்காலத்தில் நேனோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி ஆகியவையே ஆதிக்கம் செலுத்தும். அவற்றில் இந்தியமாணவர்கள் நிபுணத்துவம் பெறுவது அவசியம் என்று கூறினார்.
குற்றவாளிகளே நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாறி வரும் நிலையில், குடியரசுத் தலைவர் பதவியில் இருப்பதுமகிழ்ச்சி அளிக்கிறதா என்று ஒரு மாணவர் கேட்டார். இதற்கு பதிலளித்த கலாம், அதை விட நாடாளுமன்றத்தில் 50சதவீத உறுப்பினர்கள் பட்டதாரிகளாகவும், டாக்டர் பட்டம் பெற்றவர்களாகவும் இருப்பது என்னை வியப்பில்ஆழ்த்துகிறது என்றார்.
தனது கலந்துரையாடலில் இந்திய விஞ்ஞானிகள் விக்ரம் சாராபாய், சதீஸ் தவான், பிரம் பிரகாஷ், ராமசேஷன்மற்றும் ராஜா ராமண்ணா ஆகியோரை கலாம் விரிவாக நினைவு கூர்ந்தார்.
இன்று பிறந்த நாள் எனினும், கலாம் அதைக் கொண்டாட பிரத்யேகமாக நேரம் ஒதுக்கவில்லை.சுற்றுப்பிரயாணத்தில் இருக்கும் கலாம் மைசூரில் தேசிய இளைஞர் கருத்தரங்கில் கலந்து கொள்ள அங்கு வந்தார்.அங்கு சிறுவர்கள் மத்தியில் பிறந்த நாள் கேக் வெட்டினார்.
பின்னர் அங்கு இருந்தவர்களிடம் பேசுகையில், தியாகையரின் புகழ்பெற்ற, எந்தரோ மகானு பாவலுகீர்த்தனையைப் பாடிக் காட்டினார்.
இன்று பாகல்கான் லயன்ஸ் கிளப் விழாவிலும், டி.ஆர்.டி.ஓ. விழாவிலும் பங்கேற்கிறார். பின்னர் அகமாதபாத்தில்நடைபெறும் சர்வதேச சுற்றுலா கருத்தரங்கிலும் கலந்து கொள்கிறார்.
கலாமுக்கு தட்ஸ்தமிழ்.காம் வாசகர்கள் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
-
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரானார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! ஸ்டாலின் பங்கேற்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்! -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications