பள்ளி மீது மின்னல் தாக்கி மாணவன், மாணவி பலி
கோவை:
கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மின்னல் தாக்கியதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவனும்,மாணவியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடுமலைப்பேட்டை பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மடத்துக்குளம் அரசுஉயர் நிலைப் பள்ளியின் மீது மின்னல் தாக்கியது. இதில் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அனிதா, அருண்பிரசாத் ஆகியோர் உடல் கருகி வகுப்பிலேயே இறந்தனர்.
18 மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கி மாணவ, மாணவியர் இருவர் பலியான சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலியான மாணவன், மாணவியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வர்ஜெயலலிதா அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ. 15,000மும் லேசானகாயமடைந்தவர் தலா ரூ.6,000மும் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications