தமிழகத்திற்கு ரூ. 1,534 கோடி நிதியுதவி: டி.ஆர்.பாலு
மதுரை:
தமிழகத்திற்கு பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்ற ரூ. 1,534 கோடி நிதியுதவி அளிக்க மத்திய அரசுதிட்டமிட்டு வருவதாக மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் மொத்தம் 32 இடங்களில் ரூ. 180 கோடிமதிப்பில் பைபாஸ் சாலைகள் அமைக்கப்படும். 17 இடங்களில் ரூ. 134 கோடி செலவில் ரயில்வே மேம்பாலங்கள்அமைக்கப்படும்.
122 இடங்களில் ரூ. 400 கோடி செலவில் மேம்பாலங்கள் கட்டப்படும். 23 இடங்களில் ரூ. 250 கோடி செலவில்பெரிய மேம்பாலங்கள் கட்டப்படும். இவை அனைத்தையும் சேர்த்து ரூ. 1,534 கோடி நிதியுதவியை தமிழகத்திற்குஅளிக்க மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது.
படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களைப் பயன்படுத்தி சாலைப் பணியாளர்களை நியமிக்க மத்தியஅரசு யோசித்து வருகிறது. சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு இவர்களது சேவை பயன்படுத்திக் கொள்ளப்படும்.தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலத்தின்போது அமல்படுத்தப்பட்ட சாலைப் பணியாளர்களைப் போன்ற திட்டம் இதுஎன்றார் அவர்.