அரசு ஊழியர்களுடன் இன்று ஜெ. பேச்சு
சென்னை:
அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று பேச்சு நடத்துகிறார். அரசு ஊழியர்களுக்குசாதகமாக சில அறிவிப்புகளை அவர் வெளியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில்நிலவுகிறது.
அகவிலைப்படி உயர்வு, சரண் விடுப்பு ஊதியம் உள்ளிட்ட சுமார் 50 கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று தமிழக அரசு சார்பில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைச்செயலாளர் நாராயணன் உள்ளிட்டோர் அரசு சார்பிலும், அரசு ஊழியர்கள் சார்பில் 31 ஊழியர் சங்கப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் இறுதியில் வெளியே வந்த அரசு ஊழியர் ஒன்றியத் தலைவர் சூரியமூர்த்திசெய்தியாளர்களிடம் பேசுகையில், மிகவும் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடந்தது. திருப்தியாகசெல்கிறோம். இருப்பினும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. முதல்வருடன் கலந்து பேசி இன்று நல்லமுடிவாகச் சொல்கிறோம் என்று அமைச்சர்கள், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.
முதல் கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இன்று முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன்பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அரசுஊழியர்களுக்கு சாதகமாக சில முடிவுகளை ஜெயலலிதா அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள்மத்தியில் நிலவுகிறது.