For Daily Alerts
Just In
வீரப்பனை கொன்றது தவறு: சுப. இளவரசன்
அரியலூர்:
வீரப்பனை சுட்டுக்கொன்றது தவறான செயல் என்று தமிழர் விடுதலைப்படையின் தலைவர் சுப. இளவரசன்தெரிவித்தார்.
கூவாகம் ராமசாமி கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளின் விசாரணைக்காக ஜெயங்கொண்டம்நீதிமன்றத்திற்கு சுப. இளவரசன் நிருபர்களிடம் கூறியதாவது:
மகாத்மா காந்தி பிறந்த இந்த ஜனநாயக நாட்டில் ஒரு மனிதனை சுட்டுக் கொன்றது தவறான செயலாகும். அவன்எத்தகைய கொடியவனாகவே இருந்தாலும் சுட்டுக்கொல்வது சரியல்ல. அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசட்டப்படி தண்டனை அளிப்பதே முறையான செயலாகும்.
வீரப்பனின் மரணத்திற்கு 7 கோடி மக்களின் பிரதிநிதியான நான் வீரவணக்கம் செலுத்துகிறேன் என்று கூறினார்.
பின்னர் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது விசாரணையை நீதிபதி ராஜேந்திரன் அடுத்த மாதம் 11-ம் தேதிக்குஒத்திவைத்தார்.
chennai tamil nadu jayalalitha father daughter news veerappan stf rajkumar vijayakumar valter devaram suba ilavarasan
Story first published: Wednesday, October 20, 2004, 5:30 [IST]