ஹீரோ விஜயக்குமார்: கொண்டாடும் பாலக்காடு
Subscribe to Oneindia Tamil
பாலக்காடு (கேரளா):
வீரப்பனை சுட்டுக் கொன்ற கூடுதல் டிஜிபி விஜயக்குமாரின் சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்காடு பகுதிமக்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழக சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பல்லாசனாகிராமத்தைச் சேர்ந்தவர். தங்களது ஊரைச் சேர்ந்த விஜயக்குமார் இன்று தேசிய அளவில் ஹீரோவாகிவிட்டதால்அப் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விஜயக்குமான் உறவினரும், பல்லாசனா கிராமத்தைச் சேர்ந்தவருமான சின்னக்குட்டன் நாயர்கூறுகையில்,
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விஜயக்குமார் பல்லாசனா கிராமத்திற்கு வந்திருந்தார். இங்குள்ள அவரது குலதெய்வத்தை வழிபட்டு விட்டுச் சென்றார். இப்போது வீரப்பனை கொன்றுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications