ஜெயலட்சுமியின் தந்தையிடம் சிபிஐ விசாரணை
மதுரை:
ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
ஜெயலட்சுமியிடம் கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து 8 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணைமேற்கொண்டனர். மதுரை ரயில் நிலையத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சுமார் 65 மணி நேரம் நடந்த விசாரணையில் 500க்கும்அதிகமான கேள்விகளுக்கு ஜெயலட்சுமி கூறிய பதில்கள் அனைத்தும் வீடியோவிலும், எழுத்து வடிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜெயலட்சுமி கொடுத்த தகவல்களை, கிராஸ் செக் செய்து அவரிடம் துருவித் துருவி விசாரணை நடந்தது. இந்நிலையில் அவரிடம் முதல்கட்ட விசாரணையை முடித்துக் கொண்ட சிபிஐ இன்று ஜெயலட்சுமியின் தந்தைஅழகிரிசாமியிடம் விசாரணை தொடங்கியுள்ளது.
ஜெயலட்சுமியுடனான விவகாரத்தில் தனது மனைவி, ஜெயலட்சுமியின் குழந்தைகளை இன்ஸ்பெக்டர்இளங்கோவன் தலைமையிலான போலீஸார் கடத்திச் சென்றதுதொடர்பாக மாரநேரி காவல் நிலையத்தில்அழகிரிசாமி புகார் கொடுத்துள்ளார்.
மேலும் ஜெயலட்சுமியைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்துக்கு தந்தி கொடுத்தஅழகிரிசாமி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து தான் ஜெயலட்சுமி விவகாரமே வெளியில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை குறித்து சிபிஐ கூடுதல் எஸ்.பி. சிவாஜி நிருபர்களிடம் கூறுகையில், ஜெயலட்சுமியிடம் கடந்த 8 நாட்கள் விசாரணைநடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இன்னும் நிறைய விசாரிக்க வேண்டி இருப்பதால் மற்றபடி இதில் மேற்கொண்டு எதுவும்சொல்ல முடியாது என்றார்.
தேவைப்பட்டால் மீண்டும் ஜெயலட்சுமியை அழைத்து விசாரிப்போம் என்று சிபிஐ கூறியிருப்பதாக அவரது வழக்கறிஞர் அழகர்சாமிதெரிவித்தார்.
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.!












Click it and Unblock the Notifications