ஜெயலட்சுமியின் தந்தையிடம் சிபிஐ விசாரணை
மதுரை:
ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
ஜெயலட்சுமியிடம் கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து 8 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணைமேற்கொண்டனர். மதுரை ரயில் நிலையத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சுமார் 65 மணி நேரம் நடந்த விசாரணையில் 500க்கும்அதிகமான கேள்விகளுக்கு ஜெயலட்சுமி கூறிய பதில்கள் அனைத்தும் வீடியோவிலும், எழுத்து வடிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜெயலட்சுமி கொடுத்த தகவல்களை, கிராஸ் செக் செய்து அவரிடம் துருவித் துருவி விசாரணை நடந்தது. இந்நிலையில் அவரிடம் முதல்கட்ட விசாரணையை முடித்துக் கொண்ட சிபிஐ இன்று ஜெயலட்சுமியின் தந்தைஅழகிரிசாமியிடம் விசாரணை தொடங்கியுள்ளது.
ஜெயலட்சுமியுடனான விவகாரத்தில் தனது மனைவி, ஜெயலட்சுமியின் குழந்தைகளை இன்ஸ்பெக்டர்இளங்கோவன் தலைமையிலான போலீஸார் கடத்திச் சென்றதுதொடர்பாக மாரநேரி காவல் நிலையத்தில்அழகிரிசாமி புகார் கொடுத்துள்ளார்.
மேலும் ஜெயலட்சுமியைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்துக்கு தந்தி கொடுத்தஅழகிரிசாமி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து தான் ஜெயலட்சுமி விவகாரமே வெளியில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை குறித்து சிபிஐ கூடுதல் எஸ்.பி. சிவாஜி நிருபர்களிடம் கூறுகையில், ஜெயலட்சுமியிடம் கடந்த 8 நாட்கள் விசாரணைநடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இன்னும் நிறைய விசாரிக்க வேண்டி இருப்பதால் மற்றபடி இதில் மேற்கொண்டு எதுவும்சொல்ல முடியாது என்றார்.
தேவைப்பட்டால் மீண்டும் ஜெயலட்சுமியை அழைத்து விசாரிப்போம் என்று சிபிஐ கூறியிருப்பதாக அவரது வழக்கறிஞர் அழகர்சாமிதெரிவித்தார்.












Click it and Unblock the Notifications