வீரப்பன்: விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை
விழுப்புரம்:
வீரப்பன் கொலை தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்க வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் கல்யாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வந்த தகவல்களில் பல்வேறுசந்தேகங்கள் உள்ளன.
இது தொடர்பாக அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் முதலில் அளித்த பேட்டிக்கும், பின்னர் அளித்த பேட்டிக்கும்இடையே முரண்பாடுகள் உள்ளன. முதலில் உளவுத்துறை தகவலின் பேரிலேயே வீரப்பன் சுற்றி வளைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக விஜயகுமார் தெரிவித்தார்.
பின்னர், வீரப்பன் குழுவில் ஒரு உளவாளியை சேர வைத்து பொறி வைத்து வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவிஜயகுமார் தெரிவித்தார். முதலில் வீரப்பனின் வேனை ஓட்டிய டிரைவர் தப்பிவிட்டதாகக் கூறினார். பின்னர்அந்த வேனை ஓட்டியவர் தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட அதிரடிப்படை வீரர்தான் என்று கூறினார்.
வீரப்பன் தலையிலுள்ள காயங்களைப் பார்க்கும்போது அதிரடிப்படையினர் மிக அருகிலிருந்து சுட்டது போல்தெரிகிறது.
பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் வீரப்பன் உள்ளிட்டோரின் சடலங்களை அவர்களது உறவினர்களிடம்காவல்துறை ஒப்படைக்கப்படவில்லை. மேலும் அவர்களின் குல வழக்கப்படி சடலத்தைக் குளிப்பாட்டி சடங்குகள்செய்யவும் அனுமதிக்கவில்லை.
இதனால் வீரப்பன் குழுவினர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட தடயங்களை மறைக்கவே காவல்துறையினர்இவ்வாறு நடந்து கொண்டதாக சந்தேகம் வந்துள்ளது.
எனவே இது குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்.
தேசிய மனித உரிமை ஆணையத்திடம் நீதிபதி சதாசிவம் கமிஷன் சமர்ப்பித்த அறிக்கை வெளியிடப்பட்டால்அதிரடிப்படை செய்த கொலைகள், பாலியல் கொடுமைகள் பற்றிய உண்மைகள் வெளியுலகுக்குத் தெரியவரும்.இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அப்பாவிகளைத் துன்புறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications