வீரப்பன்: விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை
விழுப்புரம்:
வீரப்பன் கொலை தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்க வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் கல்யாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வந்த தகவல்களில் பல்வேறுசந்தேகங்கள் உள்ளன.
இது தொடர்பாக அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் முதலில் அளித்த பேட்டிக்கும், பின்னர் அளித்த பேட்டிக்கும்இடையே முரண்பாடுகள் உள்ளன. முதலில் உளவுத்துறை தகவலின் பேரிலேயே வீரப்பன் சுற்றி வளைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக விஜயகுமார் தெரிவித்தார்.
பின்னர், வீரப்பன் குழுவில் ஒரு உளவாளியை சேர வைத்து பொறி வைத்து வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவிஜயகுமார் தெரிவித்தார். முதலில் வீரப்பனின் வேனை ஓட்டிய டிரைவர் தப்பிவிட்டதாகக் கூறினார். பின்னர்அந்த வேனை ஓட்டியவர் தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட அதிரடிப்படை வீரர்தான் என்று கூறினார்.
வீரப்பன் தலையிலுள்ள காயங்களைப் பார்க்கும்போது அதிரடிப்படையினர் மிக அருகிலிருந்து சுட்டது போல்தெரிகிறது.
பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் வீரப்பன் உள்ளிட்டோரின் சடலங்களை அவர்களது உறவினர்களிடம்காவல்துறை ஒப்படைக்கப்படவில்லை. மேலும் அவர்களின் குல வழக்கப்படி சடலத்தைக் குளிப்பாட்டி சடங்குகள்செய்யவும் அனுமதிக்கவில்லை.
இதனால் வீரப்பன் குழுவினர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட தடயங்களை மறைக்கவே காவல்துறையினர்இவ்வாறு நடந்து கொண்டதாக சந்தேகம் வந்துள்ளது.
எனவே இது குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்.
தேசிய மனித உரிமை ஆணையத்திடம் நீதிபதி சதாசிவம் கமிஷன் சமர்ப்பித்த அறிக்கை வெளியிடப்பட்டால்அதிரடிப்படை செய்த கொலைகள், பாலியல் கொடுமைகள் பற்றிய உண்மைகள் வெளியுலகுக்குத் தெரியவரும்.இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அப்பாவிகளைத் துன்புறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications