வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டி: முத்துலட்சுமி

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிகூறினார்.

பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

வீரப்பன் என் புருஷனாக இருப்பினும், அவர் செய்தது தவறு தான். அதற்கான தண்டனை அவருக்கு கிடைத்துவிட்டது. அதை நான் நியாயப்படுத்தவோ, பெரிதுபடுத்தவோ விரும்பவில்லை. அவரது உடலைதோண்டியெடுத்து மறு பரிசோதனை செய்வதிலும் எனக்கு விருப்பமில்லை.

வீரப்பனை பிடிக்க வேண்டும் என்பதற்காக நான் உட்பட எனது உறவினர்களை அதிரடிப்படையினர் அடித்து,உதைத்து சித்ரவதைக்கு ஆளாக்கினர்.

என் மீதும், என்னுடைய உறவினர்கள் மீதும் போடப்பட்டுள்ள எல்லா வழக்குகளையும் தமிழகம் மற்றும் கர்நாடகஅரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள என்னுடைய உடமைகளையும், சொத்துக்களையும் என்னிடம்திரும்ப ஒப்படைக்க வேண்டும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், நான் இனிஉழைத்து பிழைக்க முடியாத நிலையில் இருக்கிறேன். எனவே அரசு தான் எனக்கு எல்லா உதவிகளையும் செய்துதரவேண்டும்.

என் இரு மகள்கள் படிப்பு செலவையும் அரசு ஏற்று மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும்.

என்னைப்போல் முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு பெண் தான். அவரும் பல்வேறு இன்னல்களை, பிரச்னைகளைசந்தித்திருக்கிறார். இதனால், என்னுடைய உணர்வுகளை அவர் புரிந்து கொண்டு, உதவி செய்வார் என்ற நம்பிக்கைஎனக்கு உள்ளது.

இப்போதும் போலீஸ் எங்களை நிழல்போல பின் தொடர்கிறது. மற்றவர்களை போல நாங்களும் நிம்மதியாக வாழவிரும்புகிறோம்.

வாய்ப்பு கொடுத்தால் வரும் தேர்தலில் போட்டியிடுவேன். எந்த கட்சியின் சார்பாக போட்டியிடுவேன் என்பதைஇப்போது கூற முடியாது என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+