For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயர் நீதிமன்றத்தில் 7 புதிய டிவிஷன் பெஞ்ச்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிறையில் இருக்கும் குற்றவாளிகளின் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு வசதியாகபுதிதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 7 டிவிஷன் பெஞ்ச்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளின் வழக்குகளை விரைவாக முடித்து நீதி வழங்கவேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உள்பட ஏராளமான கைதிகள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு, ஜாமீன் மனுக்கள் போன்றவை சென்னை உள்பட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறுஉயர் நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக நிவையில் உள்ளன.

இந் நிலையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 7டிவிஷன் பெஞ்சுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பெஞ்சுகளில் தலா 2 நீதிபதிகள்இருப்பார்கள்.

கைதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீடு, ஜாமீன் மனுக்களை இவர்கள் அதிகமுன்னுரிமை கொடுத்து விசாரிப்பர். இன்று முதல் ஒரு வாரத்திற்கு இந்த விசாரணைநடைபெறும்.

இக் காலகட்டத்தில் சிவில் வழக்குகள் மிகவும் குறைவான அளவிலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X