இட்லிக் கடை திறக்கும் சுப்ரமணியம் சுவாமி!
சென்னை:
மதுரையில் மிகப் பிரபலமான முருகன் இட்லிக் கடையின் சென்னை கிளைகளை ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி திறந்து வைக்கவுள்ளார்.
இந் நிகழ்ச்சியில்முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக ஜனதாக் கட்சித் தலைவருமானசந்திரலேகாவும் கலந்து கொள்கிறார்.
மதுரையைச் சேர்ந்த முருகன் இட்லிக் கடை, இட்லி, தோசைகளுக்குப் பிரபலமானது. சிலஆண்டுகளுக்கு முன் இதன் உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டபோதுமுருகன் இட்லிக் கடை மூடப்பட்டது.
அப்போது ஒரு தரப்புக்கு அதிமுகவினர் சிலரும் இன்னொரு தரப்புக்கு மதுரை எம்.பியாக இருந்தசுவாமியும் ஆதரவாகக் களமிறங்கினர். இதனால் அவ்வப்போது இந்த இட்லிக் கடையை வைத்துமதுரையில் அரசியல் மோதல் நடந்து வந்தது.
இந் நிலையில் போலீஸ் தடையையும் மீறி இந்தக் கடையை திறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாசுப்ரமணிய சுவாமி.
இப்போது பிரச்சனைகள் ஓய்ந்துவிட்ட நிலையில் சென்னையில் 2 இடங்களில் கிளைஅமைத்துள்ளனர் முருகன் இட்லிக் கடை நிறுவனத்தினர், தங்களது 3வது கிளையைதிருவல்லிக்கேணியில் இன்று திறக்கிறார்கள்.
இந்தக் கடையை சுப்ரமணிய சுவாமி திறந்து வைக்கிறார். அகில இந்திய அளவில் அரசியல் நடத்தி,வெளிநாட்டுத் தலைவர்கள் பலருடன் நெருக்கமான நட்பு வைத்திருந்த சுப்ரமணியம் சுவாமிதற்போது இட்லிக் கடை திறப்பு விழாவில் பங்கேற்கும் அளவுக்கு ரொம்பவே ப்ரீயாக இருப்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications