For Daily Alerts
Just In
ஜெயலட்சுமி: எஸ்.ஐ., ஏட்டு ஜாமீனில் விடுதலை
மதுரை:
ஜெயலட்சுமி குடும்பத்தினரை கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர்ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகைக்கடை அதிபர் முருகவேல் ஆகியோர் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகியும் அவர்கள் மீது தமிழக போலீசார் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவர்களை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஜாமீனில்விடுவித்தது.
ஜெயலட்சுமியுடனான பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், இந்த மூவரும் ஒரு கும்பலுடன்வந்து ஜெயலட்சுமியின் தாய், தம்பி, மகன், மகள் ஆகியோரைக் கடத்திச் சென்றனர். இதற்குஇன்ஸ்பெக்டர் இளங்கோவன் உடந்தையாக இருந்தார்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இவர்கள் தினமும் காலை 10 மணிக்கு மாரனேரி காவல் நிலையத்தில்கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
chennai tamil nadu permission news sivakasi bank account surrender ilangovan rajasekar fir innocent interview jayalakshmi jeyalakshmi nlc officials
Story first published: Wednesday, October 27, 2004, 5:30 [IST]