சிறையில் படித்து எம்.பில் வென்ற பெண் கைதி
வேலூர்:
படிப்புக்கு எதுவும் தடையில்லை என்பதை வேலூர் மத்திய சிறையில் உள்ள பெண் கைதிநிரூபித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்தவர் கிளாடிஸ் லில்லி. ஒரு வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்ட இவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எம்.ஏ. வரை படித்துள்ள லில்லி, சிறையில் தனது மேற்படிப்பைத் தொடர முடிவு செய்தார். சிறைஅதிகாரிகளும் இதற்கு ஊக்கம் அளித்தனர்.
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் எம்.பில் ஆய்வுப் படிப்பைஅஞ்சல் வழிக் கல்வி மூலம் மேற்கொண்ட லில்லி தனது படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.
வேலூர் சிறையிலேயே எம்.பில் பட்டம் பெற்ற முதல் பெண் கைதி என்ற பெருமையும் லில்லிக்குக்கிடைத்துள்ளது. சிறையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்கோபாலகிருஷ்ணன், லில்லிக்கு எம்.பில் பட்டத்தை வழங்கிப் பாராட்டினார். சக கைதிகளும் அவரைப்பாராட்டிப் பேசினர்.












Click it and Unblock the Notifications