மருதுபாண்டியர் ஸ்டாம்ப்: பாஜக தான் காரணம்
சென்னை:
மருது பாண்டியர் நினைவு தபால் தலை வெளியிட பாஜக ஆட்சிதான் முக்கியக் காரணம் என்று தமிழக பாஜகபொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மருது பாண்டியர் நினைவு தபால் தலை வெளியிட கடந்தவாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது மத்திய அமைச்சர் அருண் ஷோரிதான் தீவிர முயற்சிகளைமேற்கொண்டார்.
ஆனால் இப்போது மருதுபாண்டியர் தபால் தலை வெளியிட நாங்கள்தான் காரணம் என்பது போல திமுகவினர்பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.
வீரப்பன் கதை முடிந்து விட்டது. அவன் எப்படி செத்தான் என்பது பெரிய பிரச்சினை அல்ல. அவனது உடலைமீண்டும் தோண்டி மறு பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை நியாயமானது அல்ல என்றார்அவர்.
மருதுபாண்டியர் தபால் தலை வெளியிடப்பட தானே காரணம் என முதல்வர் ஜெயலலிதாவும், இல்லை நான்காரணம் என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், இருவரும் இல்லை நான் தான் மிக முக்கியக் காரணம் என்றுமுன்னாள் தபால்துறை அமைச்சர் திருநாவுக்கரசரும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் ராஜாவும் கோதாவில்குதித்துள்ளார்.