ஹஜ்: நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு அழைப்பு
டெல்லி:
கடந்த வருடம் ஹஜ் நெரிசலில் இறந்த 12 இந்தியர்களின் உறவினர்கள் 36 பேர் இலவசமாக ஹஜ் யாத்திரைசெல்ல செளதி அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அஹமது செளதி அரேபியாவில் சுற்றுப் பயணம்மேற்கொண்டார். அப்போது செளதி அரசர் பஹ்த் மற்றும் ஹஜ் துறை அமைச்சர் இயாத் பின் அமீன் மதானிஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
இதனையடுத்து கூடுதலாக 10,000 இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல செளதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.மேலும் கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்த 12 இந்தியர்களின் நெருங்கியஉறவினர்கள் 36 பேருக்கு (தலா 3 பேர் வீதம்) செளதி அரசின் செலவில் ஹஜ் யாத்திரை செல்ல அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் பயணம் மற்றும் தங்குவதற்கான செலவை செளதி அரசு ஏற்கிறது.
இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு 82,000 பேர் மத்திய ஹஜ் கமிட்டி மூலமாகவும், 45,000 பேர் தனியாகவும் ஹஜ்யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ஹஜ் பயணிகளுக்கு வசதியாக பாட்னா, ஒளரங்கபாத், கெளகாத்தி ஆகியஇடங்களில் இருந்தும் செளதிக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications