முன்னாள் கமிஷனர் முத்துக்கருப்பனுக்கு 7 நாள் சிறை
சென்னை:
சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 7 நாள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், சென்னை எழும்பூர் (தனி) தொகுதி வாக்குப் பதிவின்போதுபெரும் வன்முறை மூண்டது. இதையடுத்து அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ஜான் பாண்டியன் கொடுத்தபுகாரின் பேரில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீன் கோரி பரிதி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்தசெஷன்ஸ் நீதிமன்றம் பரிதியை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இந்த ஜாமீனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை நகர காவல்துறை சார்பில் மேல் முறையீடுசெய்யப்பட்டது. அந்த மனுவில் பரிதி இளம்வழுதி போலீஸ் காவலில் இருப்பதாக காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பரிதிக்குக் கொடுக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது.
இந்தத் தீர்ப்பையடுத்து கமிஷ்னர் முத்துக்கருப்பன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார் பரிதி இளம்வழுதி.
அதில், நான் போலீஸ் காவலில் நான் இருப்பதாக பொய்யான தகவலை முத்துக்கருப்பனும், ராஜேந்திரனும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புக்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், சிங்காரவேலு ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.
அதில், நீதிமன்றத்திற்குப் பொய்யான தகவலை பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் தந்துள்ளது பெரும்வருத்தம் தருகிறது. இதற்காக இருவருக்கும் 7 நாள் சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் மேல் முறையீடு செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.