ராம்மோகன் மிரட்டப்பட்டார்: அதிமுக புகார்
டெல்லி:
ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு ராம்மோகன் ராவை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மிரட்டினார் என்று அதிமுகஎம்.பியான பி.ஜி.நாராயணன் கூறினார்.
ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
ராம்மோகன் ராவை ஆளுநர் பதவியில் இருந்து விலகும்படியும், ஆளுநர் மாளிகையை காலி செய்யும்படியும் சிவராஜ் பாட்டீல்மிரட்டினார். ராம்மோகன் ராவுக்கு தொடர்ந்து இடைஞ்சல்கள் கொடுக்கப்பட்டன.
2001-ம் ஆண்டில் பாத்திமா பீவி ஆளுநராக இருந்தபோது என்ன இடையூறுகளை சந்தித்தாரோ அதே போல இப்போது ராம்மோகன்ராவும் சந்தித்தார். ராம்மோகன் ராவை டெல்லிக்கு சிவராஜ் பாட்டீல் வரவழைத்து, அவரை சென்னையை விட்டு விரட்டி விட்டார்.
ராமமோகன் ராவை வீட்டுக்கு அனுப்புவதுதான் மத்திய அரசின் திட்டம். திமுகவிடம் இருந்து வந்த நிர்பந்தம் காரணமாகவே மத்திய அரசுஇதைச் செய்துள்ளது.
மறைந்த சென்னாரெட்டி போன்ற ஒருவரை ஆளுநராக்க திமுக விரும்புகிறது. கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதுஅவருக்கு சென்னாரெட்டி எத்தனை தொல்லைகள் கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
கூட்டணி கட்சியின் நிர்பந்தத்துக்கு மத்திய அரசு பணிவது ஏன் என்பது தெரியவில்லை. இது கூட்டாட்சி தத்துவத்தையும், மத்திய- -மாநிலஉறவையும் பாதிக்கும் என்று கூறினார்.
டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட ராம்மோகன் ராவிடம் தமிழக அரசு குறித்து அறிக்கைகளைக் கேட்ட பாட்டீல், பின்னர் அவரிடம்ராஜினாமா கடிதத்தையும் வாங்கிக் கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னரே, ஜனாதிபதிக்கு நேரடியாக தனதுராஜினாமாவை அனுப்பினார் ராவ்.
பஞ்சாப் ஆளுநரும் ராஜினாமா:
இதற்கிடையே கடந்த பா.ஜ.க. நியமிக்கப்பட்ட பஞ்சாப் மாநில ஆளுநர் ஓ. பி. வர்மாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.