மகாராஷ்டிர முதல்வராகும் விலாஸ்ராவ் தேஷ்முக்
மும்பை:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் (59) மீண்டும் மகாராஷ்டிர முதல்வராகிறார்.
காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வென்று 13 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஆட்சி அமைப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையேபோட்டா போட்டி நிலவி வந்தது. இறுதியில் முதல்வர் பதவியை காங்கிரசுக்கே விட்டுத் தந்தார் சரத் பவார்.
இதையடுத்து முதல்வர் பதவியைப் பிடிக்க இப்போதையே முதல்வர் சுசுல் குமார் ஷிண்டேவுக்கும் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ்தேஷ்முக்குக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானவர்கள் விலாஸ்ராவுக்கே ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து அவரையே முதல்வராக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவரது தலைமையில்புதிய அரசு அமைகிறது.
துணை முதல்வராகிறார் பாட்டீல்:
துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.ஆர். பாட்டீல் பதவியேற்கிறார். இந்தப் பதவியைப் பிடிக்க முன்னாள் துணைமுதல்வர் புஜ்பல் கடுமையாக முயன்றார். ஆனால், சரத்பவாரின் ஆதரவில் பாட்டீல் தேர்வானார்.












Click it and Unblock the Notifications