கிரிக்கெட்: பட்டேல், யுவராஜ் சிங், அகார்கர் நீக்கம்
நாக்பூர்:
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணியில் இழந்ததையடுத்து அடுத்தபோட்டிக்கான அணியிலிருந்து பார்த்திவ் பட்டேல், யுவராஜ் சிங், ஆகாஷ் சோப்ரா, அஜித் அகார்கர் ஆகியோர்அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
நாக்பூரில் நடந்த டெஸ்டில் இந்தியா 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதோடு, தொடரையும் இழந்தது.இதனையடுத்து அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்திய அணி அடைந்த தோல்வி பல தரப்புகளிலும்கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடர் முழுவதும் மோசமாக கீப்பிங் செய்த பார்த்திவ் பட்டேலை நீக்குவது என்ற தீர்மானத்துக்கு தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவளித்தனர். பட்டேலுக்குப் பதில் தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடிக்கிறார்.
அதேபோல் இந்தத் தொடரில் சோபிக்கத் தவறிய அகார்கர், யுவராஜ் சிங், ஆகாஷ் சோப்ரா ஆகியோரும்அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். துவக்க ஆட்டக்காரர் இடத்துக்கு கெளதம் காம்பீர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் நவம்பர் 3ம் தேதி தொடங்கும் இறுதிப் போட்டியில், காயம் காரணமாக இர்பான் பதான் விளையாடமாட்டார். அதேபோல் அணித் தலைவர் செளரவ் கங்குலி விளையாடுவதும் சந்தேகமாகவே உள்ளது.
அணியில் தற்போது ராகுல் டிராவிட், செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், கெளதம் காம்பீர்,லட்சுமண், முகமது கைப், தீரஜ் ஜாதவ், தினேஷ் கார்த்திக், முரளி கார்த்திக், ஜாகிர்கான், அனில் கும்ளே, ஹர்பஜன்சிங், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் எஸ்.எஸ்.பால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications