அப்ரூவர் ஆக சுப. இளவரசன் கூட்டாளி விருப்பம்
மேட்டூர்:
தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த சகாதேவன், அப்ரூவராக மாறி தமிழர் விடுதலைப் படை தீவிரவாதிகள்குறித்து பல தகவல்களை தெரிவிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
தமிழர் விடுதலைப் படைத் தலைவர் சுப. இளவரசனின் நெருங்கிய கூட்டாளி சகாதேவன். சுப. இளவரசன்கைதானபோது, சகாதேவனும் கைது செய்யப்பட்டார்.
மேட்டூர் நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவரை போலீஸார் கொண்டு வந்தபோதுசெய்தியாளர்களிடம் சகாதேவன் பேசுகையில், நான் அப்ரூவர் ஆக விரும்புகிறேன். தமிழர் விடுதலைப் படைதீவிரவாதிகள் குறித்த பல தகவல்களை அரசுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இதற்காக கூடுதல் டிஜிபி விஜயக்குமாரை சந்திக்க விரும்புகிறேன். அவரிடம், தமிழர் விடுதலைப் படையைச்சேர்ந்த செல்வம் என்ற செல்வராஜ் குறித்த பல தகவல்களை சொல்ல விரும்புகிறேன். அதேபோல ராஜ்குமார்கடத்தல் குறித்த பல தகவல்களும் என்னிடம் உள்ளன.
வீரப்பனிடமிருந்து சுப. இளவரசன் ஏராளமான பணத்தைப் பெற்றுள்ளார். அதன் மூலம் ஆயுதங்கள் வாங்கதிட்டமிட்டிருந்தார். வீரப்பனிடமிருந்து பெற்ற பணத்திலிருந்து பாலமுருகன், பாக்கியராஜ் ஆகிய தமிழர்விடுதலைப் படை தொண்டர்களுக்கு ரூ. 5 லட்சம் பணம் கொடுத்துள்ளார் சுப. இளவரசன் என்று கூறினார்சகாதேவன்.












Click it and Unblock the Notifications