For Daily Alerts
Just In
வீரப்பன் திட்டம் ஏற்கனவே தெரியும்: சங்கராச்சாரியார்
கோழிக்கோடு:
கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன் அதே சமயத்தில் என்னையும் கடத்தத் திட்டமிட்டிருந்தான் என்றுகாஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பன் என்னைக் கடத்தத்திட்டமிட்டிருந்தது எனக்கு முன்பே தெரியும்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன், அவரை விடுவிக்கும் முடிவுக்கு வந்தபோது, என்னைக் கடத்ததிட்டமிட்டிருந்தான். ராஜ்குமாரை விடுவித்து விட்டு என்னை காட்டுக்குள் சிறை வைக்க அவன்திட்டமிட்டிருந்தான்.
என் மூலம் தமிழக, கர்நாடக அரசுகளிடம் ஏராளமான பணத்தைப் பறிக்கவும் வீரப்பன் திட்டமிட்டிருந்தான்.ஆனால் அது நடைபெறவில்லை. இந்தத் தகவல் எனக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்றார்சங்கராச்சாரியார்.
Comments
Story first published: Sunday, October 31, 2004, 5:30 [IST]