தமிழகத்துடன் குமரி இணைந்ததன் ஆண்டு விழா
நாகர்கோவில்:
தமிழகத்துடன் கன்னியாகுமரி உள்ளிட்ட 9 தாலுகாக்கள் இணைந்ததன் 49வது ஆண்டு விழா நாளைகன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்துடன் இருந்து பின்னர் கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் சேர்க்கப்பட்ட கன்னியாகுமரி,தோவாளை, அகஸ்தீஸ்வரம் உள்ளிட்ட 9 தாலுகாக்களை மீண்டும் தமிழகத்துடன் சேர்க்கக் கோரி குமரி பகுதிமக்கள் மிகப் பெரும் போராட்டத்தை நடத்தினர். இதில் ஏராளமானவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.
இறுதியில் மார்ஷல் நேசமணி தலைமையிலான போராட்டத்திற்கு வெற்றி கிடைத்து, கடந்த 1956ம் ஆண்டுநவம்பர் 1ம் தேதி இப்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதிகள் தாய் தமிழகத்தோடுஇணைக்கப்பட்டன.
இவ்வாறு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து நாளையுடன் 49 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டிகன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மார்ஷல் நேசமணியின் சிலைக்கு மொழிப் போர் தியாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.இதற்காக நாளை குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.