வீரப்பன்: முதுமலையில் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி
நீலகிரி:
வீரப்பன் தொல்லை நீங்கி விட்டதால் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயத்தில் வெளிநாட்டவர்கள்சுற்றுப்பயணம் செய்ய தடை நீக்கப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் அட்டூழியம் அதிக அளவில் இருந்ததாலும், வெளிநாட்டவர்களை அவன் கடத்திச்செல்லும் வாய்ப்பு இருந்ததாலும், நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டவர்கள்சுற்றுப்பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதேபோல பந்திப்பூர், மசினகுடி ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்தங்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதால் அவனால் இருந்து வந்த அச்சுறுத்தல் நீங்கியுள்ளது.இதையடுத்து முதுமலை சரணாலயத்திற்கு வெளிநிாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யானை சவாரி செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேபோல பந்திப்பூர், மசினகுடி காட்டுப் பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகளில் தங்கவும் அவர்களுக்கு அனுமதிவழங்கப்படுகிறது.
இதன் காரணமாக இப்பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரும் நாட்களில்அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.