மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின் 25 நாள்கள் கழித்து, கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர்.

மீன் துறையின் அனுமதி பெற்று 714 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவுஅருகே மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அந்தப் பகுதிக்கு வந்த இலங்கைக் கடற்படையினர்வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் மீன்களையும் பறிமுதல் செய்தனர். அதோடு ஞானசீலன், ராமசாமிஆகியோருக்குச் சொந்தமான மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர். மீனவர்களையும் தாக்கினர்.இதனையடுத்து மீனவர்கள் விசைப்படகுகளுடன் கரைக்குத் திரும்பினர்.

இந்தச் சம்பவம் குறித்து மீனவர் கூட்டமைப்பின் பொறுப்பாளர் ஞானசீலன் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைத் தாக்கி வலைகளை வெட்டி கடலில் வீசியதால் அதிக நஷ்டம்ஏற்பட்டுள்ளது. அத்துடன் குறைந்த அளவு இறால் மீன்களை கரைக்குக் கொண்டுவந்தால் விலை மிகவும்குறைவாகவே உள்ளது.

அரசு அறிவித்தபடி டீசலுக்கான விற்பனை வரியை ரத்து செய்திருந்தால்கூட நஷ்டம் இல்லாமல் தப்பிக்கலாம்.ஆனால் எல்லா வகையிலும் மீனவர்கள் துயரத்துக்கு உள்ளாகின்றனர். இந் நிலை தொடர்ந்தால் மீண்டும்போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+