For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன்: விஜயக்குமாருக்கு ஆர்.டி.ஓ. சம்மன்

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

சந்தன கடத்தல் வீரப்பனும் அவன் கூட்டாளிகளும் கொல்லப்பட்டது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம்அளிக்குமாறு விஜயக்குமாருக்கு தர்மபுரி ஆர்.டி.ஓ. சம்மன் அனுப்பியுள்ளார்.

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான உண்மை நிலவரத்தை வெளியுலகுக்கு தெரிவிக்கும் வகையில்தர்மபுரி ஆர்.டி.ஓ. பிரகாசத்தை விசாரணைஅதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. இது தொடர்பாக ஆய்வு செய்துஅரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து கடந்த வாரம் அவர் விசாரணையைத் தொடங்கினார். வீரப்பனை சுட்டுக் கொன்ற போது சம்பவஇடத்தில் இருந்த அதிரடிப்படை வீரர்கள், வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி ஆகிய 4பேரின் குடும்பத்தினர், உறவினர்களை ஆர்.டி.ஓ. சந்தித்து விசாரித்தார்.

அடுத்தக்கட்டமாக பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் பணியை ஆர்.டி.ஓ. இன்று தொடங்கினார். வீரப்பன் சாவுகுறித்து பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தர்மபுரி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து தங்களுக்குத்தெரிந்ததை கூறலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இன்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உட்பட சிலர் நேரில் ஆஜராகி ஆர்.டி.ஓ.,விடம் விளக்கமளித்தனர் .நாளையும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.

இந் நிலையில் அதிரடிப்படை தலைவர் விஜயகுமார், எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் மற்றும் சம்பவ இடத்தில்இருந்த அதிரடிப்படை வீரர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறுஆர்.டி.ஓ. பிரகாசம் சம்மன் அனுப்பி இருக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X