ரோப் கார்: ஜெ. நாளை பழனி பயணம்
பழனி:
பழனி கோவில் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் வசதியை தொடங்கி வைக்க முதல்வர்ஜெயலலிதா நாளை அந் நகருக்கு வருகிறார்.
பழனி மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்வதற்கு தற்போது விஞ்ச் எனப்படும் இழுவை ரயில் உள்ளது.இங்கு ரோப் கார் எனப்படும் தொங்கும் ரயில் (ரோப் கார்) வசதியும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ரூ. 5 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ரோப் கார் சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கிவைக்கிறார். இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் பழனி வருகிறார்.
இதற்காக அருள்மிகு தண்டாயுதபாணி கலைக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.பிற்பகல் 1 மணிக்கு பழனி வரும் ஜெயலலிதா ரோப் காரை துவக்கி வைத்துவிட்டு, அதன் மூலமே மலை மீதுள்ளகோவிலுக்குச் செல்கிறார்.
கோவிலில் தரிசனம் செய்துவுட்டு சென்னை திரும்புவார். ஜெயலலிதா வருகையையொட்டி பழனியில் 2000க்கும்மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.