போன் விவகாரம்: ஜெவை நம்ப மறுக்கும் ராமதாஸ்
சென்னை:
உள்துறை அமைச்சருமான தொலைபேசி உரையாடலை டேப்பில் பதிவு செய்யவில்லை என்று முதல்வர்ஜெயலலிதா கூறுவது நம்பும்படியாக இல்லை என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் நடந்த உரையாடலை பதிவு செய்யவில்லை என்றும், கவர்னர் மாற்றம்தொடர்பாக ஆதாரம் இருந்தால் கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டதால், அந்த உரையாடலை மனதில்நினைவுபடுத்தி தலைமைச் செயலாளர் லட்சுமி பிரனேசிடம் சொன்னதாகவும், அதன் சாரம்சத்தைத் தான் உச்சநீதிமன்றத்தில் தலைமைச் செயலாளரால் சமர்பிக்கப்பட்டதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் இந்த விளக்கத்தை நம்ப முடியவில்லை. முதல்வர் சில விவரங்களைக் கேட்டார், அதற்குஉள்துறை அமைச்சர் சில விஷயங்களைத் தெரிவித்தார் என்பது தான் சாரம்சம்.
ஆனால், லட்சுமி பிரனேஷ் தாக்கல் செய்த மனுவில், முதல்வருக்கும் உள்துறை அமைச்சருக்கும் இடையே நடந்தஉரையாடல் கேள்வி பதில் ஸ்டைலில் மிக விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.
மொத்தம் 14 முறை ஜெயலலிதா குறுக்கிட்டு கேள்வி கேட்டிருக்கிறார். 14 முறையும் பாட்டீல் விளக்கம்தந்திருக்கிறார்.
இந்த நீண்ட உரையாடலை, நீண்ட நேரத்துக்குப் பின் எப்படி ஜெயலலிதா நினைவுபடுத்தி தலைமைச்செயலாளரிடம் சொல்ல முடியும்?. இது எப்படி சாத்தியம்?. ஜெயலலிதாவின் இந்த விளக்கம் நம்பும்படியாகஇல்லை.
மற்றவர்கள் நம்புவது ஒருபுறம் இருக்கட்டும். இதை உச்ச நீதிமன்றம் எப்படி நம்பும்?. உச்ச நீதிமன்றத்தில்விசாரணையின்போது உள்துறை அமைச்சகம் இந்த உரையாடலை மறுத்தால் என்னவாகும்?
ஜெயலலிதா நினைவுப்படுத்தி சொல்வதை அப்படியே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா?.
டேப்பில் பதிவு செய்தால் அது சட்டரீதியில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் முதல்வர் ஜெயலலிதா இப்போதுஉரையாடலை பதிவு செய்யவில்லை என்று மறைக்கப் பார்க்கிறார்.
வெளியரங்கமாகாத அந்தரங்கமும் இல்லை, வெளிச்சத்துக்கு வராத மறைபொருளும் இல்லை என்ற முதுமொழிக்குஏற்ப, உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். அப்போது தவறு செய்தவர்கள் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.