For Daily Alerts
Just In
நல்ல தலைவர் இல்லையே!
சென்னை:
தேசிய அளவிலும், தமிழக அளவிலும் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு உதவும் வகையில் ஒரு நல்ல முஸ்லீம் தலைவர் கூட இல்லைஎன்பது வருத்தத்துக்குரியது என ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி கூறியுள்ளார்.
சென்னையில் முஸ்லீம் கல்வி அறக்கட்டளை சார்பில் இப்தார் விருந்து நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு அலிபேசுகையில், தமிழக அளவிலும், தேசிய அளவிலும் ஒரு முஸ்லீம் தலைவர் கூட இல்லை. இருக்கும் ஓரிரு தலைவர்களும் உயர்பதவிக்கு வந்த பிறகு சமுதாயத்தையும், மக்களையும் மறந்து விடுகிறார்கள்.
இது வருத்தத்துக்குரியது. தேசியஅளவிலும், தமிழக அளவிலும் முஸ்லீம் சமுதாயத்தினரின் நலனைப் பாதுகாக்கும்நோக்கத்தைக் கொண்ட நல்ல முஸ்லீம் தலைவர்கள் உருவாக வேண்டியது அவசியமாகியுள்ளது என்றார்.
Story first published: Wednesday, November 3, 2004, 5:30 [IST]