மீண்டும் புயல் சின்னம்: தமிழகத்தில் மழை தொடரும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியிருப்பதால் சென்னை உள்படதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சிநிலையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை வலுத்துள்ளது. இந் நிலையில் சென்னைக்கும், இலங்கைக்கும் இடையேவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னை நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழை காரணமாக பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போலத் தேங்கி நிற்கிறது. இதனால் பல குடிசைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன,போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications