For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமையல் கேஸ் விலை: இனி மாதம் ரூ. 5 அதிகரிக்கும்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 2.19ம், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 2.12ம் உயர்த்தப்பட்டுள்ளது.

சமையல் கேசின் விலை சிலிண்டெருக்கு ரூ. 20 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்குவந்துவிட்டது.

டிசம்பம் மாதம் முதல் கேஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் தெடர்ந்து ரூ. 5 உயர்த்தப்படும் என்றும் பெட்ரோலியத்துறைஅமைச்சர் மணிசங்கர அய்யர் தெரிவித்தார்.

மண்ணெண்ணெயின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை.

உயர்த்தப்பட்ட விலையின்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 41.51 (பழைய விலை ரூ. 40.14) ஆகஇருக்கும். டீசலின் விலை லிட்டர் ரூ. 20.30 (பழைய விலை ரூ. 26.93) ஆக இருக்கும்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு இதுவரை ரூ. 20,000 கோடிஇழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலும் விலை உயர்வை தாமதப்படுத்தினால் பொருளாதாரம் நசிவடையும் என்பதாலும்பெட்ரோல், டீசல், கேஸின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக அய்யர் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் மிரட்டல்:

இந்த விலை உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகக் கடுமையாக எதிர்த்துள்ளது. தங்களது கருத்தையும் மீறி காங்கிரஸ்கூட்டணி அரசு விலையை உயர்த்தியுள்ளதாகக் கூறியுள்ள மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசு, இதைக் கண்டித்து தேசியஅளவில் போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்துள்ளார்.

இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X