புத்த கயாவில் சந்திரிகா: போதி மரத்தடியில் தியானம்
கயா:
புத்த கயாவில் உள்ள மகாபோதி புத்தர் கோவிலில் இலங்கை அதிபர் சந்திரிகா இன்று வழிபாடு நடத்தினார். புத்தருக்கு ஞானம்கிடைத்த போதி மரத்தின் கீழ் அமர்ந்து சந்திரிகா தியானம் செய்தார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் டெல்லியில் இருந்து இன்று காலை புத்தகயா வந்தார். அவருடன் 12 பேர்கொண்ட அதிகாரிகள் குழுவும் வந்தது.
விமான நிலையத்தில் அவர்களை மகத் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு வரவேற்று புத்தர் ஆலயத்துக்கு அழைத்துச்சென்றனர்.
கோவிலில் வழிபாடு நடத்திய சந்திரிகா பின்னர் மகா போதி மரத்தின் கீழ் அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் தியானம் செய்தார்.இதையடுத்து கோவிலில் உள்ள குளத்தில் மீன்களுக்கு உணவிட்டார்.
கோவிலில் உள்ள உலக அமைதி மணியை அடித்து ஒலியை எழுப்பிய சந்திரிகா பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
அவருக்கு பாலி மொழியில் வரவேற்பளித்த புத்த பிட்சுக்கள், அவருக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர்.