நதிகள் இணைப்பு திட்டத்திற்கு கேரளா எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தை கேரளா எதிர்ப்பதாக அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திருவாஞ்சூர்ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, கேரளா முதல்வர் உம்மன் சாண்டிநிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தை கேரளா ஆதரிக்குமா என்ற கேள்விக்கு, உம்மன் சாண்டியின் அருகிலிருந்தராதாகிருஷ்ணன் பதிலளித்தார். அவர் கூறுகையில்,
தென்னக நதிகள் இணைப்பில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் இதை எதிர்க்கிறோம். ஏனெனில் கேரளாவில் உபரி நீர்இல்லை.
6 மாதங்களாக நாங்கள் வறட்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நதிகள் இணைப்பிற்கு வழங்குமளவிற்கு எங்களுக்குபோதிய தண்ணீர் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications