அதிரடிப்படையினரிடம் தர்மபுரி ஆர்.டி.ஓ. விசாரணை
தர்மபுரி:
சந்தன கடத்தல் வீரப்பன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அதிரடிப்படையினரிடம் நாளை முதல் தர்மபுரி ஆர்.டி.ஓ.விசாரணை நடத்தவிருக்கிறார்.
தமிழக அரசின் உத்தரவின் பேரில், வீரப்பன் கொலை குறித்து தர்மபுரி ஆர்.டி.ஓ. பிரகாசம் விசாரித்து வருகிறார்.
முதற்கட்டமாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.
அடுத்த கட்ட விசாரணைக்காக அதிரடிப்படை தலைவர் விஜயக்குமார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுஇருக்கிறது. தற்போது அதிரடிப்படை வீரர்களுக்கு சம்மன் அனுப்பும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந் நிலையில், அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பிரகாசத்தைசந்தித்தது. அவர்கள் 3 பெரிய இரும்பு பெட்டிகளை பிரகாசத்திடம் ஒப்படைத்தனர்.
அதில் வீரப்பனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், டைரி, துணிகள் ஆகியவை இருந்தன. இவற்றைதற்போது பிரகாசம் ஆய்வு செய்து வருகிறார்.
அடுத்து அதிரடிப்படையினரிடம் நாளை முதல் விசாரணை தொடங்கும் என்று கூறப்படுகிறது.