சுபாஷனுக்கு எதிராக மீண்டும் வக்கீல்கள் போர்க்கொடி!
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு எதிராக தமிழகம் மற்றும் புதுவை மாநில வழக்கறிஞர்கள்போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சுபாஷன் ரெட்டியை மாற்றக் கோரி சென்னை மற்றும் மதுரை வழக்கறிஞர்கள் சில மாதங்களுக்கு முன்பு தொடர் போராட்டம்நடத்தி வந்தனர். பின்னர் இது தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களின் கூட்டுப் போராட்டமாக மாறியது.
இந் நிலையில், சுபாஷன் ரெட்டியை கேரள மாநில உயர்நீதிமன்றத்திற்குக்கு மாற்றப் போவதாக செய்திகள் வெளியாகின.ஆனால்மாறுதல் உத்தரவு ஏதும் வெளியாகவில்லை.
இந்தப் பின்னணியில், தமிழக, புதுவை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்தக் கூட்டத்தில்,சுபாஷன் ரெட்டியை இடமாற்றம் செய்வதாக அறிவிப்பு வெளியாகி பல நாட்களாகியும் அவர் இன்னும் மாற்றப்படாமல்இருப்பதற்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
சுபாஷன் ரெட்டியை உடனடியாக மாற்றி உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக டிசம்பர் 18ம் தேதி மீண்டும் கூடிப் பேசுவது எனவும், அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துஆலோசிக்கப் போவதாகவும் கூட்டமைப்பின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications