தமிழக தேர்தல் அதிகாரி சாரங்கி திடீர் மாற்றம்!
சென்னை:
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி திடீர் என்று மாற்றப்பட்டுள்ளார்.
தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வந்த நரேஷ் குப்தாவுக்குப் பிறகு கடந்த 2000ம் ஆண்டில் தேர்தல் அதிகாரியாகநியமிக்கப்பட்டவர் சாரங்கி.
கடந்த சட்டமன்ற மற்றும் பொதுத் தேர்தல்களை திறம்பட நடத்தினார். ஆனாலும் அவர் மீது எதிர்க் கட்சிகள் அடிக்கடி பாய்ந்துவந்தன.
இந் நிலையில், சாரங்கி திடீரென்று மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். மத்திய தொகுதி சீரமைப்புக் குழு தலைவர் மற்றும்சிறப்பு அதிகாரியாக சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுப் பணித்துறைச் செயலாளர் பிச்சாண்டி தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை மத்தியப் பணிக்கு மாற்றுமாறு சாரங்கி கோரியிருந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே அவர்மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications