அதிமுக பிரமுகர் கொலை: பாமக எம்எல்ஏ முன் ஜாமீன்
சென்னை:
கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றபாமக உறுப்பினர் வேல்முருகன் மற்றும் அவரது இரு சகோதரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த முன்னாள் பாமக உறுப்பினரான வெங்கடேசன் என்பவர்அதிமுகவில் சேர்ந்த சில நாட்களில் கொலை செய்யப்பட்டார்.
அவரைக் கொலை செய்ததாக எம்.எல்.ஏ. வேல் முருகன், அவரது சகோதரர்கள் திருமால்வளவன், கண்ணன்ஆகியோர் மீது வெங்கடேசனின் மனைவி சரஸ்வதி குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் வேல்முருகன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக பதவியேற்ற பிரேம்குமார், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவேல்முருகன் மற்றும் அவரது சகோதரர்களை கைது செய்ய தீவிரமாக முயன்று வந்தார்.
ஆனால், வேல்முருகனும், அவரது சகோதரர்களும் தலைமறைவாகிவிட்டனர். டெல்லியில் இருந்தபடி பேட்டிகள்அளித்து வந்தனர். எஸ்.பி. பிரேம்குமார் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீலைச் சந்தித்தும் வேல்முருகன் புகார் செய்தார்.
இந் நிலையில் வேல்முருகன் மற்றும் சகோதரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுசெய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், 3 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கினார்.
மூவரும் கோவையில் தங்கியிருந்து அங்குள்ள மாவட்ட செஷன்ஸ் நீதிபதி முன் தினமும் காலையில் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.












Click it and Unblock the Notifications