மீனவர்: மன்மோகனுக்கு ஜெ. கடிதம்
சென்னை:
இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கைஎடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
சர்வதேச எல்லையைக் கடந்ததாக கூறி தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்படுவது குறித்து பலமுறை தங்களுடைய கவனத்திறக்கு கொண்டு வந்துள்ளேன்.
இந் நிலையில் கடந்த 9ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் 12 ராமேஸ்வரம் மீனவர்களை, அவர்களது 3படகுகளுடன் இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவை சுற்றிலும் மீன் பிடிப்பதற்கு தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்தப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சட்டவிரோதமாக இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று வருகிறார்கள்.
இது தமிழக மீனவர்களிடையே மிகுந்த கவலையையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே கடத்திச் செல்லப்பட்டுள்ளமீனவர்களை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலலிதா.
இதேபோல, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்குக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications