பிரேம்சுக்கு 3 ஆண்டு சிறை உறுதி!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வெளிநாட்டுப் பணத்தை வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருச்சி செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுசிறைத் தண்டனையை உறுதி செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

திருச்சி அருகே ஆசிரமம் வைத்து நடத்தியவர் பிரேமானந்தா. இலங்கையைச் சேர்ந்த இவரது ஆசிரமத்தில் பெண்கள் பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், இதைத் தட்டிக் கேட்ட ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும் கடந்த 1994 ம்ஆ ண்டு பெரும் பரபரப்புஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரேமானந்தா கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகளில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது சிறை வாசம் அனுபவித்து வருகிறார் பிரேமானந்தா.

இந் நிலையில், பிரேமானந்தாவின் ஆசிரமத்தில் வெளிநாட்டுப் பணம் இருந்ததை 1994ம் ஆண்டு நடந்த சோதனையின்போது வருமானவரித்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து பிரேமானந்தா மீது கணக்கில் காட்டாமல் வெளிநாட்டுப் பணத்தை வைத்திருந்ததாக கூறிவழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிரேமானந்தாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. திருச்சி மாவட்டசெஷன்ஸ் நீதிமன்றமம் இதை உறுதி செய்தது.

இதை எதிர்த்து பிரேமானந்தா தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலனை செய்தமதுரை உயர்நீதிமன்றக் கிளை, பிரேமானந்தாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+