இடிபடும் ஸ்ரீதேவியின் அடுக்குமாடி
சென்னை:
நடிகை ஸ்ரீதேவிக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அனுமதி பெறாமல்கட்டப்பட்ட 4 மேல் மாடிகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பிஷப் வாலஸ் சாலை பகுதியில் உள்ள ஸ்ரீதேவியின் இடத்தில் 8 மாடிகளைக் கொண்டுஅடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது. அனுமதிக்கப்பட்ட 4 மாடிகளுக்கு மேல் கூடுதலாக 4 மாடிகள் அனுமதிபெறாமல் கட்டப்பட்டன.
இந் நிலையில் அக் கட்டடத்தின் பேஸ்மெண்ட் தூண்கள் இடிந்து விழுந்தன. கட்டடமே எப்போதுவேண்டுமானாலும் சரியும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 4 மாடிகளை இடிக்கநடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து உயர் நீதிமன்றத்தை ஸ்ரீதேவி நாடினார். மாநகராட்சி நிடவடிக்கைக்ைகுத்தடை கோரினார்.
வழக்கு முடியும் வரை கூடுதலாக கட்டப்பட்ட 4 மாடிகளை இடிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருந்தது. இந் நிலையில் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.
அனுமதி பெறாமல் கட்டிய 4 மாடிகளை இடிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரியானதேஎன்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினரா.
இதைத் தொடர்ந்து கூடுதலாக கட்டப்பட்ட 4 மாடிகளை இடிக்கும் பணியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள்மீண்டும் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications