ஹைதராபாத்தில் பிரேம்ஸ்-2விடம் விசாரணை
சென்னை:
திருச்சியைச் சேர்ந்த போலி சாமியார் பிரசன்ன வெங்கடேச சதுர்வேத சுவாமியை விசாரணைக்காக போலீஸார்ஹைதராபாத் கொண்டு சென்றுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த போலி சாமியார் பிரசன்ன வேங்கடேச சதுர்வேத சுவாமி, சென்னை தொழிலதிபர் சுரேஷின்மனைவி, மகளைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத்சென்று சென்னை போலீஸார் சதுர்வேதியை கைது செய்து கொண்டு வந்தனர்.
சுரேஷின் மனைவி மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். இதை சதுர்வேத சுவாமி சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
கடவுள் பக்தியை வைத்து அவரை தனது இச்சைக்குப் பயன்படுத்தியுள்ளார். நான் கடவுள், நான் எது செய்தாலும் அது கடவுளின்கட்டளைப்படிதான் நடக்கும் என்று கூறி சுரேஷின் மனைவியை பாழ்படுத்தியுள்ளார். மேலும், உனது கணவருடன் நீ சேரக் கூடாது. அப்படிசேர்ந்தால் அழிந்து விடுவாய் என்றும் கூறி மூளைச் சலவை செய்துள்ளார்.
சதுர்வேத சுவாமியின் புத்தியைப் புரிந்து கொண்ட சுரேஷின் மனைவி அவரிடமிருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால் அவரை பாலியல்ரீதியாக தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அவரது வீட்டில் இருந்த பல விலை உயர்ந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளார்.
வெறும் தாள்களில் சுரேஷின் மனைவியிடம் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டு அதை வைத்து அவரை மிரட்டியுள்ளார். சுரேஷின்மனைவி, மகளை வீட்டிற்குள் வைத்துப் பூட்டிக் கொடுமைப்படுத்தியுள்ளார். பின்னர்தான் ஹைதராபாத் கடத்திச் சென்றுள்ளார்.
தற்போது போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள சதுர்வேதியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந் நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் சோதனையிடுவதற்காக சதுர்வேதியை போலீஸார்இன்று ஹைதராபாத் கொண்டு சென்றனர்.
சதுர்வேதியின் சென்னை ஆசிரம அலுவலகத்திலிருந்து பல முக்கிய ஆவணங்களை போலீஸார் பறிமுதல்செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் சதுர்வேதி சாமியார் தன்னை ஏமாற்றியதாக மேலும் ஒரு பெண் பிரமுகர் மத்திய குற்றப் பிரிவுபோலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் யார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.அவரது புகார் குறித்து போலீஸார் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
பல கோடி சொத்து:
இதற்கிடையே, சதுர்வேத சுவாமிக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது தெரியவந்துள்ளது. அவரது பெயரில்உள்ள வங்கி லாக்கர்களில் ஏராளமான நகைகள், பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பல தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை மோசடி செய்து பல கோடி பணத்தை சதுர்வேத சுவாமி சுருட்டியுள்ளார்.இவர்களில் சிலரின் மனைவிகளையும் தனது பக்கம் வளைத்து அவர்களிடம் செக்ஸ் உறவும் வைத்துள்ளார்.
இதுகுறித்து தொழிலதிபர்கள் வட்டாரத்தில் சலசலப்பு எழவே தனது கோவை தொடர்புகளைக் குறைத்துக் கொண்டுள்ளார் சுவாமி. இந்நிலையில்தான் சுரேஷின் மனைவியை வைத்து ஏராளமான பணம் பறித்துள்ளார், அவரது குடும்பத்தையும் சீரழித்துள்ளார்.
-
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம்












Click it and Unblock the Notifications