சங்கராச்சாரியார் கொடும்பாவி எரிப்பு: 3 பேர் கைது
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் சஙகராச்சாரியாரின் கொடும்பாவியை எரித்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த மாநிலஅமைப்பாளர் பரமானந்தன், தஞ்சை மாவட்ட கிளை செயலாளர் அருள் உள்ளிட்டோர் உருவ பொம்மையை எத்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து இந்த அமைப்பைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சமுதாய பிரச்சினை: நல்லகண்ணு
ஜெயேந்திரர் கைது விவகாரத்தை மதப் பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது. இது ஒரு சமுதாயப் பிரச்சினை என்று இந்திய கம்யூனிஸ்ட்செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மடாதிபதி ஜெயேந்திரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைதை இந்தியகம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே இதை ஒரு சமுதாயப் பிரச்சினையாகவே கருத வேண்டும், இதற்குமதச் சாயம் பூசுவது சட்டவிரோதாம்.
கடந்த 2 மாதங்களாக தமிழக காவல்துறை துப்பு துலக்கி, தீவிர விசாரணை மேற்கொண்டு, தடயங்களை சேகரித்து அதன்அடிப்படையில்தான் ஜெயேந்திரரைக் கைது செய்துள்ளது. இது பாராட்டுக்குரியது என்றார்.












Click it and Unblock the Notifications