கைது செய்த தமிழக கமாண்டோ படை மீது புகார்!
சென்னை:
ஜெயேந்திரரை கைது செய்ய விமானத்தில் ஆயுதங்களை எடுத்துச் சென்ற தமிழக போலீஸ் கமாண்டோ படை மீது இந்திய விமானஆணையமும் மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையினரும் புகார் கூறியுள்ளனர்.
விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரைக் கைது செய்ய போலீஸ் தனிப் படையினர் தமிழக அரசுக்குச் சொந்தமான செஸ்னா ரக விமானத்தில்சென்றனர். ஹைதராபாத்திலிருந்து ஜெயேந்திரரை அதே விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
இந்த விஷயத்தில் புதிய சர்ச்சை எழுப்பட்டுள்ளது. செஸ்னா விமானத்தில் துப்பாக்கிகள் போன்றவற்றை தமிழக போலீஸார் எடுத்துச்சென்றது சட்டவிரோதமான செயல் என விமான ஆணையம், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன.
விமான நிலைய பாதுகாப்பை கவனிப்பது இந்தப் படை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் போக்குவரத்துக்கான இயக்குனரின் முன் அனுமதியைப் பெறாமல் இதுபோல ஆயுதங்கங்களை எடுத்துச் சென்றது சட்டப்படிகுற்றமாகும் என்று இரண்டு அமைப்புகளும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவித்துள்ளன.
இது குறித்து காவல்துறை உயர் வட்டாரங்களில் விசாரித்தபோது, நாங்கள் சட்டவிரோத செயல் எதிலும் ஈடுபடவில்லை என்று கூறியபோலீசார், விமானத்துறையிலும் தொழில்துறை பாதுகாப்புப் படையிலும் அதிகாரம் கொண்ட பதவிகளில் உள்ள சங்கராச்சாரியாரின்சீடர்களான அதிகாரிகள் தான் தேவையில்லாமல் இந்த விவகாரத்தை கிளப்புகின்றனர் என்றனர்.
முன்னதாக இந்த கமாண்டோ படையினர் ஹைதராபாத்தில் வைத்து சங்கராச்சாரியாரைக் கைது செய்ய முயன்றபோது அவர் உடன் வரமறுத்துள்ளார். நான் காஞ்சிபுரம் வந்த பிறகு வந்து என்னைப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால், உடனே உங்களிடம் விசாரிக்க வேண்டும். உங்களை தனி விமானத்தில் அழைத்துச் செல்கிறோம் என்று நெடுநேரம் பேசியபின்னரே உடன் வர சம்மதித்துள்ளார். இந்தக் கைது நடவடிக்கையின்போது இளையவரான விஜயேந்திரர் அங்கிருந்தார். அவர்முன்னிலையிலேயே இக் கைது நடந்தது.
-
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications