காங்கிரசில் இணைகிறார் ப.சிதம்பரம்
சென்னை:
காங்கிரஸ் கட்சியுடன் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை வருகிற 25ம் தேதி இணையவுள்ளதாககூறப்படுகிறது.
அதிமுகவுடன், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்ததை எதிர்த்து கட்சியிலிருந்துவெளியேறியவர் ப.சிதம்பரம். பின்னர் கட்சி சார்பற்ற அமைப்பை ஆரம்பித்த அவர் அதை பின்னர் காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை என்ற பெயரில் கட்சியாக மாற்றினார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து திமுக சின்னத்தின் கீழ் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைபோட்டியிட்டது. அக் கட்சி சார்பில் புரசை ரங்கநாதன், வள்ளல்பெருமான் ஆகியோர் எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியுடன், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை இணைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டது. இருப்பினும் கட்சியை இணைக்க மாட்டேன், காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவேன் என்று கூறினார்ப.சிதம்பரம்.
இந் நிலையில் மக்களவைத் தேர்தலில் அவர் காங்கிரஸ் சின்னத்தின் கீழ் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இதன் மூலம் அவர் விரைவில் காங்கிரஸில் இணைவார் என்று கூறப்பட்டது.
தற்போது இணைப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது. வருகிற 25ம் தேதி டெல்லியில் வைத்து சோனியாகாந்தி முன்னிலையில் ப.சிதம்பரம் காங்கிரஸில் தனது கட்சியை இணைக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. வருகிற மக்களவைகுளிர்காலக் கூட்டத்தொடரின்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே மக்களவைக்கு ப.சிதம்பரம் வருவார் என்றும்அக்கட்சியினர் உறுதியாக கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications