ஜெயேந்திரருக்கு சலுகை: அனைவருக்கும் கிடைக்குமா?
சென்னை:
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம், விடுமுறை நாளில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வரலாறு படைத்துள்ளது. இந்த உரிமை, சாதாரண குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று சிவில்உரிமைகளுக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் விடுமுறை நாட்களாகும். ஆனால் ஜெயேந்திரர்தாக்கல் செய்த மனு மீது விடுமுறை நாளான சனிக்கிழமையும் விசாரணை நடத்தப்பட்டது. உயர் நீதிமன்ற வரலாற்றில் இதுபோலவிடுமுறை நாளில் விசாரணை நடத்தப்படுவது இதுவே முதல் முறை.
இதுகுறித்து சிவில் உரிமைகளுக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய கவுன்சில் உறுப்பினர் சுதா ராமலிங்கம் கூறுகையில்,ஜெயேந்திரர் ஜாமீன் மனுவை சனிக்கிழமை விசாரித்து புதிய வரலாறு படைத்துள்ளது உயர் நீதிமன்றம்.
இந்த சலுகை, உரிமை, சாதாரண குடிமக்களுக்கும் இனிமேல் கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால், சட்டம் அனைவருக்கும்சமம் என்ற வார்த்தையில் அர்த்தம் இல்லாமல் போய் விடும், பலசாலியாக இருந்தால் மட்டுமே உரிமைகள், சலுகைகள்கிடைக்கும் என்று அர்த்தமாகி விடும்.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொதுவாக எந்த இடத்தில் வைத்து விசாரிக்கப்படுவார்களோ அதேபோலவேஜெயேந்திரர் விஷயத்திலும் நடக்க வேண்டும். அவருக்கென சிறப்பு சலுகைகள் காட்டக் கூடாது என்று கூறினார் அவர்.












Click it and Unblock the Notifications